BREAKING NEWS | பாணந்துறை நீதிமன்ற வழக்குக் கோப்புகள் மாயம்!

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘குடு சளிந்து’வுக்கு எதிரான இரண்டு வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

📌 இந்த வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை தொடர்பில் நீதிமன்றப் பதிவாளர் கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

📌 இதனையடுத்து, குறித்த நீதிமன்றத்தில் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்குப் பொறுப்பாக கடமையாற்றிய அதிகாரி செப்டம்பர் 2ஆம் திகதி தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

📂 காணாமல் போனதாகக் கூறப்படும் கோப்புகளில்:

  • பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்கு
  • பணச்சலவைச் சட்டத்தின் கீழ் CIDயினால் தொடரப்பட்ட வழக்கு

என்பன அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔎 சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7 பேர் பெண் ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore