ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பாணை விமான நிலையத்திலேயே வழங்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர் தெரிவிப்பு

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவான (FCID) அழைப்பாணை கிடைத்திருந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகிய தகவல்களை ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறுத்துள்ளார்.

அவருக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் FCID தரப்பிலிருந்து எந்தவொரு அழைப்பாணையும் கிடைக்கவில்லை என குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்ப உறுப்பினரின் தகவலின்படி, ஷிராந்தி ராஜபக்ஷ தனது திட்டமிட்ட பயணத்திற்காக தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அவரது விமானம் அதிகாலை 12.50 மணிக்கு புறப்படவிருந்த நிலையில், விமானத்தில் ஏறுவதற்கான வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID கடிதத்தை திடீரென அவரிடம் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“FCID முன்னதாக எந்தவொரு அழைப்பையும் விடுத்து, நேரில் வந்து வாக்குமூலம் வழங்குமாறு கோரவில்லை. விமான நிலையத்திற்கு வந்து பயணத்திற்கு தயாராகியிருந்தபோதே அந்த அறிவிப்பு கிடைத்தது” என குடும்ப உறுப்பினர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விளக்கங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஊடகப் பிரிவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இதனிடையே, ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை 1.10 மணியளவில் Singapore Airlines SQ-469 விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FCID விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘சிரிலிய சவிய’ கணக்குடன் தொடர்புடைய ரூ.10 மில்லியன் நிதி பரிவர்த்தனை குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore