மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் பலத்த காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, வீதியில் பயணித்த கார் ஒன்று 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





