கொழும்பு, மட்டக்குளி – ராஸ்ஸமூனகந்த பகுதியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் கோரத்தன்மையை வெளிப்படுத்தும் Dashcam காட்சிகளும் வெளியாகியுள்ளன.
🎥 Video Watch : CLICK_HERE
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





