அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் உணவு கண்காட்சி

சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் கீழ் கினிகத்தென ஸ்ரீ அபிநவரம கோவிலில் (18) இன்று குறித்த கண்காட்சியை நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் ஆதரவுடன், அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அதிகாரி திரு. பந்துல ஹெரத் மற்றும் அந்த சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் இணைந்து பொதுவாகப் பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு முறைகளைக் காட்சிப்படுத்தும் நோக்கிலும் ஊட்டச்சத்து, சுகாதாரம், மருத்துவம், குடிநீர் சுத்திகரிப்பு முறைகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய நேரடி விளக்கங்கள், மற்றும் தொற்றா நோய்கள் குறித்து சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்தனர்.

இலவசமாக நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், ஏராளமான உள்ளூர் மக்களும் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore