அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அதில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விடயங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவதும் அடங்கும் என்றும், ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் தொடங்கும் என செய்ட் அப்பாஸ் அராக்சி அரச தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது கடமைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் என்று கூறி, அமெரிக்க அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது.

இது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் வித்திட்டது.

அத்துடன் உலகின் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை திறம்பட மூடவும் வழிவகுத்தது.

ஏப்ரல் மாதத்தில் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதிலும், அமெரிக்காவும் ஈரானும் இந்த வாரம் பரஸ்பர தாக்குதல்களை நடத்தியிருந்தன.

இந்நிலையில் அமெரிக்க – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ முடிவுகளும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore