2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போட்டி முடிந்தவுடன் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் வீரர்களுக்கிடையில் மைதானத்தில் பதற்றமான மோதல் ஏற்பட்டது.
ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, சில அர்ஜென்டினா வீரர்கள் ஸ்பெயின் வீரர்களுடன் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பாரேடஸ் போட்டி முடிந்த பின்னர் சிவப்பு அட்டை பெற்றதுடன், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களும் கால்பந்து விமர்சகர்களுமான ஆலன் ஷீரர், கேரி நெவில் உள்ளிட்டோர் அர்ஜென்டினா வீரர்களின் நடத்தையை கடுமையாக விமர்சித்தனர். அதேவேளை, லியோனல் மெஸ்ஸி மட்டுமே போட்டி முடிந்ததும் ஸ்பெயின் வீரர்களுடன் கைகுலுக்கி விளையாட்டு ஒழுக்கத்தை வெளிப்படுத்தியதாக பாராட்டப்பட்டது.
எனினும், அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, தனது அணி தோல்வியை ஏற்றுக்கொண்டதாகவும், போட்டிக்குப் பிந்தைய சூழலை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.





