துருக்கி தூதருக்கும் திலித் ஜயவீரவுக்கும் இடையே சந்திப்பு

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lutfu Turgut) அவர்களின் விசேட அழைப்பின் பேரில், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர, கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தில் விசேட கலந்தரையாடல் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

இச்சந்திப்பின் போது, தற்போதைய சர்வதேச அரசியல் நிலைமைகள், பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிப் போக்குகள், அத்துடன் இலங்கைக்கும் துருக்கிக் குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை ஒரு தொழில்முனைவு நாடாக மாற்றும் தொலைநோக்குச் சிந்தனையை வெற்றியடையச் செய்வதற்கு துருக்கிக் குடியரசிடமிருந்து பெறக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் சர்வஜன அதிகாரத்தின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்டீனும் கலந்துகொண்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore