இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னர், 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய டிராக்டர் வண்டி மற்றும் நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ.10 மில்லியன் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை 2026 ஜூலை 24ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 7 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





