திகனா பகுதியில் ICE போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிர்ப்புடன் கூடிய கைக்குண்டுடன் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை மாலை திகனா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ICE போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ரூ.63,000 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரது வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிர்ப்புடன் கூடிய கைக்குண்டு, மேலும் 1,250 மில்லிகிராம் ICE போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு ஈட்டி கத்தி ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





