70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான 2026 ஆகஸ்ட் மாத ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ் 618,352 முதியவர்களுக்காக ரூ.3.091 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 78,260 முதியவர்களுக்காக ரூ.391.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தகுதியுடைய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்கின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.





