ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர், பிற்பகல் 2.09 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான கொள்வனவு தொடர்பில் இலஞ்சமாக பெறப்பட்டதாகக் கூறப்படும் €1,454,651.24 தொகையிலிருந்து ஒரு பகுதி சிங்கப்பூரில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும், அதற்கு இணையாக 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நாமல் ராஜபக்ஷவுக்கு இலங்கை வர்த்தகர் ஒருவரிடமிருந்து மொத்தம் ரூ.100 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த விசாரணையின் போது பெறப்பட்ட வாக்குமூலங்கள், Airbus அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களின் அடிப்படையில் கைது இடம்பெற்றுள்ளதாக CIABOC தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
⚠️ குறிப்பு: இவை விசாரணை அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியாது.





