பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்திற்கான காரணம் மற்றும் உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





