அனுராதபுரத்தில் நடைபெற்ற Sri Lanka Podujana Peramuna (SLPP) பேரணியில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் (TID) விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுர நகர சபை மைதானத்தில் நடைபெற்ற SLPP பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியபோது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டின் போது தன்னை “Tiger” எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரால் TIDக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையில் LTTE அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக தொடர்ந்தும் உள்ளது.





