ஜப்பானில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக டோக்கியோவில் ஒரே நாளில் 450க்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
டோக்கியோ தீயணைப்புத் துறை வெளியிட்ட தகவலின்படி, புதன்கிழமை மட்டும் 453 பேர் வெப்ப பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது கடந்த 16 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இந்த கடும் வெப்ப அலையால் கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11,000க்கும் அதிகமானோர் அவசர மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வெப்பநிலை 40°C-ஐ கடந்துள்ள நிலையில், ஷிசுவோகா மாகாணத்தின் ஹமாமட்சு பகுதியில் 41.1°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஜப்பான் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் இந்த கடும் வெப்ப நிலையை “பேரிடர்” என குறிப்பிட்டு, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்கவும், குளிரூட்டும் சாதனங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. (CNA/AFP)





