போர்ட் ஆஃப் ஸ்பெயின் | ஆகஸ்ட் 06, 2026
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இருந்த 8 போட்டிகளின் வெற்றியற்ற பயணத்திற்கும் பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேவேளை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.
இந்த வெற்றி, பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான நம்பிக்கையையும், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் எழுச்சி பெறும் தொடக்கமாகவும் கருதப்படுகிறது.





